• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

February 4, 2022 தண்டோரா குழு

கோவை புலியகுளம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(52). இவர் சுங்கம் பணிமனையில் அரசு பஸ் டிரைவராக உள்ளார். கவுண்டம்பாளையம்-காந்திபுரம் வழித்தட பேருந்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நேற்று உக்கடம் மீன் மார்க்கெட் அருகே வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். பின்னர் அவர் பஸ்சில் பயணித்த பயணி ஒருவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த டிரைவர் விஜயகுமார் அந்த வாலிபரை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பஸ் டிரைவர் விஜயகுமாரை காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இது குறித்து விஜயகுமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவரை தாக்கியது குனியமுத்தூர் மூவேந்தர் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி அசாருதீன்(19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க