• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு பொருட்கள் ஆட்சியர் வழங்கினார்

April 2, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் அறக்கட்டளைகளுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆட்சியர் சமீரன் தலைமையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தனியார் அறக்கட்டளைகளுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து ‘உடல்நல மற்றும்‌ மனநல பாதுகாப்பு’ திட்டத்தின் கீழ்‌ சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2500 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள 3 பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள 7 பள்ளிகள் என மொத்தம் 10 பள்ளிகளிலிருந்து தலா 15 மாணவ-மாணவிகள் வீதம் 150 மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌.

இவர்களுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்தார்.இச்சத்துணவு தொகுப்பில்‌ பச்சை பயிறு, சிவப்பு அரிசி, கொள்ளு, வெள்ளை சுண்டல்‌, தட்டை பயிறு, பாதாம்‌, சோயா, அவல்‌, கருப்பு சுண்டல்‌, பேரிச்சம்பழம்‌, பச்சை பட்டாணி, முந்திரி, ராகி, கம்பு, சாமை, வரகு மற்றும்‌ அத்தி போன்றவைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க