• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்

February 26, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறி பள்ளி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையை அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டபள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுத் தேர்வுக்கு கூட மாணவர்கள் சரியாக தங்களது பாடங்களை பயில முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடவடிக்கை எடுக்க அப்பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்படுவதால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க