• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அயோத்தி வழக்கு; உச்சநீதிமன்றம் வழங்கியது தீர்ப்பே தவிர நீதியல்ல – எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர்

November 15, 2019 தண்டோரா குழு

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாபர் மசூதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்து சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கவேண்டும் தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியது தீர்ப்பே தவிர நீதியல்ல என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் பேட்டியளித்துள்ளார்.

அயோத்தி – பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் அரசியல் அழுத்தம் இருப்பதாக கூறி கோவையில் பத்திரிகையாளர் மன்றத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்தான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதரீதியான துன்புறுத்தல் தான் தற்கொலைக்கு துண்டியுள்ளது. மரணத்திற்கு காரணமான அனைவரும் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நவம்பர் 18 ம் தேதி உயர்மின் கோபுரத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் சாலை மறியல் நடக்குவுள்ள கோவை, ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆதரவு தெரிவிப்பார்கள்.மேலும் பாபர் மசூதி தீர்ப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் படிக்க