• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை விமர்ச்சித்து பேசிய திருமுருகன் காந்தியை கைது செய்ய கோரி மனு

November 12, 2019 தண்டோரா குழு

அயோத்தி வழக்கின் தீர்ப்பை விமர்ச்சித்து பேசிய திருமுருகன் காந்தியை கைது செய்ய கோரி சக்தி சேனா அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
50க்கும் மேற்பட்ட சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில்,

1992ம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில், பாபர் மசூதியின் வரலாறு முதல் அது குறித்த பல்லாண்டுகால வழக்கின் தீர்ப்பை கடந்த 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் ராமர் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பை வழங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறுஅரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்த நிலையில் மே17 என்ற இயக்கத்தை சார்ந்த திருமுருகன் காந்தி இந்து மற்றும் முஸ்லிம்களிடயே கலவரத்தை தூண்டும் விதமாக இத்தீர்ப்பு இந்துக்களின் வெற்றி அல்ல வன்முறையர்களின் வெற்றி என்று விமர்சித்து பேசி உள்ளார். மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க