• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி

February 24, 2018 தண்டோரா குழு

மகளிருக்கான மானிய அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்கப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக  நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.  அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

விமான நிலையத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் காமராஜர் சாலையில் உள்ள ஐ.என்.எஸ். ஹெலிகாப்டர் தளத்துக்கு மோடி செல்கிறார். இதன்பிறகு கார் மூலம் கலைவாணர் அரங்கத்துக்கு செல்கிறார். கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் படிக்க