• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் தொடரும்”

February 14, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நன்கு பாதுகாக்கப்படும் மற்றும் மறைந்த முதல்வரின் நல்லாட்சியும் தொடர்ந்து நடைபெறும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

“மறைந்த முதல்வர் அம்மாவின் நல்லாட்சியை அனைவரும் பாராட்டினர். அவருடைய கொள்கைகளை, கோட்பாடுகளை இந்த அரசும் செயல்படுத்தும். சட்டம் ஒழுங்குமுறை காப்பற்றப்பட வேண்டியுள்ளது. அதனால், நம்முடைய ஆட்சி நல்ல முறையில் அமைய வேண்டியது அவசியமாக இருக்கிறது.

தற்போது காணப்படும் இந்த தற்காலிக இடையூறு மற்றும் அமைதியின்மை ஆகியவற்றை நீக்கி, நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து அம்மாவின் நல்லாட்சி தொடர வழிவகுக்க வேண்டும். அதுதான் நம்முடைய முக்கியமான கடமை ஆகும். அமைதி காக்கவும் உறுதியான ஆட்சி விரைவில் நம் அம்மாவின் ஆசியுடன் செயல்படும்.

ஆதரவு அளித்த மக்களுக்கும், அமைச்சர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க