• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“அம்மாவின் நல்லாட்சி தமிழகத்தில் தொடரும்”

February 14, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நன்கு பாதுகாக்கப்படும் மற்றும் மறைந்த முதல்வரின் நல்லாட்சியும் தொடர்ந்து நடைபெறும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

“மறைந்த முதல்வர் அம்மாவின் நல்லாட்சியை அனைவரும் பாராட்டினர். அவருடைய கொள்கைகளை, கோட்பாடுகளை இந்த அரசும் செயல்படுத்தும். சட்டம் ஒழுங்குமுறை காப்பற்றப்பட வேண்டியுள்ளது. அதனால், நம்முடைய ஆட்சி நல்ல முறையில் அமைய வேண்டியது அவசியமாக இருக்கிறது.

தற்போது காணப்படும் இந்த தற்காலிக இடையூறு மற்றும் அமைதியின்மை ஆகியவற்றை நீக்கி, நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து அம்மாவின் நல்லாட்சி தொடர வழிவகுக்க வேண்டும். அதுதான் நம்முடைய முக்கியமான கடமை ஆகும். அமைதி காக்கவும் உறுதியான ஆட்சி விரைவில் நம் அம்மாவின் ஆசியுடன் செயல்படும்.

ஆதரவு அளித்த மக்களுக்கும், அமைச்சர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க