August 20, 2025
தண்டோரா குழு
அமேசான் நிறுவனத்தின் மின்வணிக ஏற்றுமதித் திட்டமான அமேசான் குளோபல் செல்லிங், இந்தியாவில் இருந்து ஈர்க்கக்கூடிய $13 பில்லியன் மதிப்புள்ள ஒட்டுமொத்த ஏற்றுமதிக்கு பங்களிக்கின்ற வகையில், கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலகளாவிய வாடிக்கையாளர்களைச் சென்றடைய தொடர்ந்து உதவுகிறது.
வீடு, சமையலறை, ஆடை, விளையாட்டு மற்றும் அலங்காரம் போன்ற தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் வகைகளின் உள்ளூர் உற்பத்தியாளர்கள் அமேசான் மூலம் புதிய சர்வதேச சந்தைகளைக் கண்டறிந்து வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கரூர் போன்ற நகரங்களைச் சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே குளோபல் செல்லிங் ப்ரோக்ராம் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் இ வணிக ஏற்றுமதியின் வளர்ந்து வரும் வேகமானது, 2030 ஆம் ஆண்டுக்குள் அமேசான் தனது ஏற்றுமதி உறுதிமொழியை நான்கு மடங்காக அதிகரித்து $80 பில்லியனாக உயர்த்தியுள்ளதை முக்கியப்படுத்திக் காட்டுகிறது. கோயம்புத்தூர் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு சேப்டர் தலைவர் சுவாமிநாதன் முன்னிலையில் திருப்பூரில் நடைபெறும் இந்த ‘ஏற்றுமதி ஹாட்’ நிகழ்வு, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் அருகிலுள்ள நகரங்களிலிருந்து 300 க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களை சென்றடைய நோக்கம் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில், வணிகங்கள் சர்வதேச அளவில் வளருவதற்கு வடிவமைக்கப்பட்ட சமீபத்திய தயாரிப்புகள், கருவிகள் மற்றும் வளங்கள் குறித்ததான தகவல்களை அமேசான் நிறுவன தலைவர்கள் பகிர்ந்துகொள்வார்கள். உள்ளூர் விற்பனையாளர்களுக்கு அவர்களின் உலகளாவிய வணிகப் பயணத்தைத் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களையும், நெட்வொர்க்கிங் வாய்ப்புகளையும் இந்த நிகழ்வு வழங்கும். இந்த ஆண்டு, அமேசான் குளோபல் செல்லிங் நடத்தும் ஒரு நாள் ‘ஏற்றுமதி ஹாட்’ நேரடி நிகழ்வு, மிர்சாபூர்/பதோஹி, மொராதாபாத் மற்றும் பானிபத் உள்ளிட்ட முன்னணி ஏற்றுமதி மண்டலங்களில் இந்தியா முழுவதிலும் நடைபெறுகிறது.
அமேசான் குளோபல் செல்லிங் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீனிதி கல்வபுடி கூறுகையில்,
“இ-காமர்ஸ் ஏற்றுமதி, புவியியல் தடைகளை உடைத்து, முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை திறக்கின்ற வகையில் இந்திய வணிகங்கள் உலகத்துடன் இணைக்கும் விதத்தை மாற்றியமைக்கின்றது. ஒரு சிறிய நகரத்தின் ஒரு முதல் தலைமுறை விற்பனையாளராக இருந்தாலும் அல்லது ஒரு நன்கு நிறுவப்பட்ட பிராண்டாக இருந்தாலும், இந்த சாத்தியத்தை ஒவ்வொரு இந்திய தொழில்முனைவோருக்கும் எட்டக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள் ஆகும்.
அமேசான் குளோபல் செல்லிங் திட்டம் மூலம், வணிகங்கள் நம்பிக்கையுடன் சர்வதேச அளவில் வளர்வதற்கு அதிகாரமளிக்கிற புதுமையான கருவிகள், ஆழ்ந்த சந்தை நுண்ணறிவுகள் மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர் அணுகல் ஆகியவற்றை வழங்குவதற்கு நாங்கள் உறுதிப்பாட்டுடன் இருக்கிறோம்.
உலக வணிகத்தில் ஒரு நம்பகமான பங்காளராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துகின்ற அதே வேளையில் இந்தியாவின் தரம், படைப்பாற்றல் மற்றும் கைவினைத் திறனை உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல தொழில்முனைவோரால் காட்டப்படுவதற்கு உதவுவதன் மூலம், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து $80 பில்லியன் மொத்த இ-காமர்ஸ் ஏற்றுமதியை எட்டும் எங்கள் தொலைநோக்கை நோக்கி நாங்கள் உறுதியாக நகர்கின்றோம்.” என்றார்.