• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அப்துல்கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு

April 19, 2018 தண்டோரா குழு

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் பயின்ற அரசுப் பள்ளியில் 2 ஆண்டுகளாக மின்கட்டணம் செலுத்தப்படாததால் மின் இணைப்பினை மின்வாரிய அதிகாரிகள் இன்று(ஏப் 19)துண்டித்தனர்.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராமேசுவரம் வர்த்தகன் தெருவில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும் படித்தார். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதையடுத்து இன்று பள்ளிக்கு சென்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் பள்ளியின் மின்இணைப்பை துண்டித்தனர்.இதனால் மாணவ மாணவிகள் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்துள்ளனர்.இதனையடுத்து கல்வி மேலாண்மைக் குழு மின் கண்டணத்தை கட்டுவதாக உறுதியளித்ததையடுத்து மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க