• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்னூர் விவகாரத்தில் வீடியோவை மறைத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

August 19, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர் பாளையம் விவகாரத்தில் வீடியோவை மறைத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர் பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர்கள் ஆகியோர் அளித்த தவறான தகவலின் காரணமாக அவதூறு பரப்பப்பட்டு ,விவசாயி கோபால்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உண்மை நிலையை அறிந்து கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததன் மூலம் விவசாயி கோபால்சாமி குற்றமற்றவர் ஆகி விடுகிறார்.எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.மேலும் தொடர் போராட்டங்களை தவிர்த்திட வழக்கு ரத்து நடவடிக்கை உதவும்.

அதே போல் வீடியோவை மறைத்து இந்த சம்பவத்திற்கு காரணமான நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க