• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைத்து மத அடையாளங்களையும் அணிந்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

December 21, 2019

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பு அனைத்து மத அடையாளங்களையும் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் இயக்கங்கள் பல்வேறு கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் ,சட்டக் கல்லூரி மாணவர்கள் ,அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், பி எஸ் ஜி கல்லூரி மாணவர்கள்,பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் என தொடர்ச்சியாக தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இப்படியிருக்க இன்று காந்திபுரம் பெரியார் படிப்பகம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று இந்து மத அடையாளம்,முஸ்லிம் மத அடையாளம் ,கிறிஸ்துவ மத அடையாளம் ஆகியவற்றை அணிந்து மத ஒற்றுமையை காப்போம், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதேபோல குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 17 க்கும் மேற்ப்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க