• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் பாலியல் கல்வி நடத்திடவும் பெண்கள் பாதுகாப்பை நிலை நாட்டிட கோரியும் மாதர் சங்கம் மனு

November 22, 2019

அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் பாலியல் கல்வி நடத்திடவும் பெண்கள் பாதுகாப்பை நிலை நாட்டிட கோரியும் மாதர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் மனு அளித்தனர். கோவை மாவட்ட கல்வி நிலையங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமையை தடுக்க கோரியும், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரியும் தனிப்படை அமைத்து கண்காணிக்க கோரியும் போஸ்கோ சட்டம் குறித்து ஆசிரியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியா ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் கனகராஜ்,
கோவையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது கண்டனத்திற்கு உரியது.அதை தடுத்து நிறுத்த போஸ்கோ சட்டம் பற்றி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவிகளுக்கு வாரம் ஒரு முறை பாலியல் பாடம் நடத்த வேண்டும் கூறினார்.
அதன் பின் பேசிய மாதர் சங்க உறுப்பினர் ஜூலி,
பாலியல் பற்றிய விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆசிரியர்களை தெய்வங்களாக நினைத்து தான் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம் என்றும் ஆனால் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க