• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அந்தமான் நிக்கோபார் தீவில் 5.9 ரிக்டர் அளவு மிதமானநிலநடுக்கம்.

March 14, 2017 தண்டோரா குழு

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை.

தேசிய நிலநடுக்கம் பற்றிய ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “நிக்கோபர் தீவுகளின் பூமிக்கடியில் 1௦ கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு, செவ்வாய்க்கிழமை காலை 8.21 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவு கோலாகப் பதிவாகியுள்ளது. சுனாமி ஏற்படும் அளவிற்கும் இந்த நிலநடுக்கம் பயங்கரமானதல்ல. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்தோ பொருட்சேதம் குறித்தோ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை” என்று தெரிவித்தது.

அதே போல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா என்னும் இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.48 மணிக்கு 3.6 ரிக்டர் அளவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்படும் நேரங்களில், அண்டை மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க, எச்சரிக்கை மையத்தை இந்தியா கட்டியெழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க