• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் அசத்திய கோவை மாணவர்கள்

July 12, 2022 தண்டோரா குழு

அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் முதல் பரிசுகளை பிடித்த கோவையை சேர்ந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்தமானில் அண்மையில் 6 வது தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.மூன்று நாட்கள் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடக, குஜராத், மகாராஷ்டிரா,அசாம்,தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர்,சூப்பர் சீனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழகம் சார்பாக கோவையில் இருந்து ஓசோன் யோகா சென்டர் பயிற்சியாளர், பாலகிருஷ்ணன் தலைமையில் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை 10 பேர் கலந்து கொண்டனர்.இதில் 6 பேர் முதல் பரிசுகளையும், ஒருவர் இரண்டாம் பரிசுகளையும்,3 யோகா ஆசிரியர்கள் அனைத்து விதமான யோகா சாம்பியன்ஷிப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அந்தமானில் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இனிப்புகள் கொடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் கூறுகையில் தொடர்ந்து இது போன்று சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் படிக்க