• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதி நவீன ஜீரண நல மையம் கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் துவக்கம் !

August 26, 2021 தண்டோரா குழு

ஜீரணக் கோளாறுகளை கண்டறிவதற்கான அதி நவீன ஜீரண நல மையம் கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் உலகெங்கும் ஜீரணக்கோளாறு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது நிலையில் கோளாறுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சிங்காநல்லூரில் உள்ள விஜிஎம் மருத்துவமனை சார்பில் உயர்நிலை ஜீரண பரிசோதனை நல மையம் துவங்கப்பட்டுள்ளது.

இதயத்தின் மின் அலைகளை எவ்வாறு ஈசிஜி கண்டறிகிறதோ அதுபோல் இரைப்பயின் மின் அலைகளை இக்கருவி கண்டறியும் எனக் கூறப்படுகிறது. கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை சிலருக்கு பசியின்மை, பொருமல் போன்றவை ஏற்பட்டாலும் இக்கருவியின் மூலம் சுலபமாக கண்டறியும் என்றும் விஜிஎம் மருத்துவமனையின் சேர்மன் மோகன் பிரசாத் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

இந்த எலக்ட்ரோ கேஸ்ட்ரோ கிராபி என்ற இக்கருவியின் மூலம் இரைப்பையில் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்தில் பிரச்சனை என்ன என்பதை கண்டறியும் இலகுவான முறை இதன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க