• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் – கெஜ்ரிவால்

February 21, 2018 தண்டோரா குழு

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நடத்தும் கட்சி அறிமுக பொதுக்கூட்டத்தில் டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், 

டெல்லியில் மாற்றம் ஏற்பட்டது போல், தமிழகத்திலும் கமல் தலைமையில் மாற்றம் ஏற்படும். கமலை களத்தில் போராடும் நிஜ ஹீரோகவா பார்க்கிறேன்.சிறந்த அரசியல் மாற்றத்தை கமல்ஹாசன் தருவார்.தமிழ்நாடு மாற்றத்திற்காக காத்திருக்கிறது.

கமலின் இந்த துவக்கம் சிறப்பானது.ஊழலுக்கு எதிராக ஒன்றிணைந்ததற்காக மகிழ்ச்சி.கறைபடியாத கரமுடையவர் கமல்.அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். கமல் யதார்த்த வாழ்க்கையின் கதாநாயகன்.திரைப்படத்தில் ரசிகனாக இருந்த நான், அவரது நிஜவாழ்க்கையிலும் ரசிகனாக ஆனேன்.

தமிழக மக்கள் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கி கிடந்தனர். டெல்லியில் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சாதனையை தமிழகத்தில் கமல் செய்து முடிப்பார்.இவ்வாறு அவர் பேசினார்.

 

 

மேலும் படிக்க