• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக தலைமையகம் செல்வீர்களா? சசிகலாவின் பதில்!

February 8, 2021 தண்டோரா குழு

நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என சசிகலா கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகிய சசிகலா இன்று பெங்களூருவில் இருந்து கார் மூலம் தமிழகம் வந்தார். இதற்கிடையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் வாணியம்பாடியில் காரில் அமர்ந்தபடியே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை.கொள்கைக்கு நான் அடிமை. ஆனால் அடக்கு முறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன். கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம்.

நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். ஜெ. நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

மேலும், அதிமுக தலைமையகம் செல்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என சசிகலா பதிலளித்தார்.

மேலும் படிக்க