• Download mobile app
14 Jan 2026, WednesdayEdition - 3626
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க. ஒரு எஃகு கோட்டை – வி.கே.சசிகலா

February 11, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலர் சசிகலா சனிக்கிழமை போயஸ் தோட்ட வளாகத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களின் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

“கட்சி மற்றும் ஆட்சியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. அ.தி.மு.க வின் ஏராளமான தொண்டர்களையும், அதிமுகவையும் நான் பத்திரமாக காப்பாற்றுவேன்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் நம்முடன் இருக்கும் வரை நம்மை பிரித்தாள நினைக்கும் யாராக இருந்தாலும் தோற்றுப் போவார்கள். ஜெயலலிதா சொன்னது போல நம்முடைய இயக்கம் ஒரு எஃகு கோட்டை.அந்த கோட்டையை யாராலும் அசைக்க முடியாது.

ஜெயலலிதா பல சோதனைகளைச் சந்தித்து தான் இந்த கழகத்தை நடத்தி வந்தார்.நாம் நியாயமாகவும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதால் கொஞ்சம் அமைதி காக்கிறேன்.ஓரளவுக்கு தான் பொறுமையைக் கையாள வேண்டும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்”.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க