• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அ.தி.மு.க. ஒரு எஃகு கோட்டை – வி.கே.சசிகலா

February 11, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலர் சசிகலா சனிக்கிழமை போயஸ் தோட்ட வளாகத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களின் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

“கட்சி மற்றும் ஆட்சியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. அ.தி.மு.க வின் ஏராளமான தொண்டர்களையும், அதிமுகவையும் நான் பத்திரமாக காப்பாற்றுவேன்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் நம்முடன் இருக்கும் வரை நம்மை பிரித்தாள நினைக்கும் யாராக இருந்தாலும் தோற்றுப் போவார்கள். ஜெயலலிதா சொன்னது போல நம்முடைய இயக்கம் ஒரு எஃகு கோட்டை.அந்த கோட்டையை யாராலும் அசைக்க முடியாது.

ஜெயலலிதா பல சோதனைகளைச் சந்தித்து தான் இந்த கழகத்தை நடத்தி வந்தார்.நாம் நியாயமாகவும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதால் கொஞ்சம் அமைதி காக்கிறேன்.ஓரளவுக்கு தான் பொறுமையைக் கையாள வேண்டும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்”.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க