• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக இரு அணிகள் விரைவில் இணையும் – எடப்பாடி பழனிச்சாமி

August 19, 2017 தண்டோரா குழு

அதிமுக இரு அணிகள் விரைவில் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சியை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார். அதிமுகவை ஜெயலலிதா கண்ணை காப்பது போல் காத்து மக்களுக்கு தன்னுடைய ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் அறிவித்துள்ளார். இடையில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதுவும் தற்போது பேச்சு மூலம் சரி செய்யப்பட்டு விரைவில் இரு அணிகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும், மேகதாதுவில் கர்நாடக அணை கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியதாக வெளியான செய்தி தவறு எனக் கூறினார்.

மேலும் படிக்க