• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது !

September 12, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (செப் 12) நடைப்பெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்றும்,இனி பொதுச்செயலாளர் பொறுப்பே கிடையாது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் எப்போதும் நிரந்தர பொதுச் செயலாளர் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்,அ.தி.மு.க.வின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனத்துக்கும் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அ.தி.மு.க.வில் இனி ஒருவரை சேர்க்கவும், நீக்கவும் பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

மேலும் படிக்க