• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிகாரிகள் அத்துமீறி செயல்படுகின்றனர் – விஜயபாஸ்கர்

April 7, 2017 தண்டோரா குழு

பாதுகாப்பு படையினர், வருமானவரித் துறையினர் அத்துமீறி செயல்படுகின்றனர் என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வருமானவரித் துறையினரின் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். மேலும் மோடிக்கு எதிராகவும், முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். பாதுகாப்பு படையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஆதரவாளர்களை சமாதானம் செய்ய வெளியே வந்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “ பாதுகாப்பு படையினர், வருமான வரித்துறையினர் அத்துமீறி செயல்படுகின்றனர். எனது வீட்டில் இருந்து எதையும் வருமான வரித்துறை பறிமுதல் செய்யவில்லை. எனது மகளை பள்ளிக்கு அனுப்ப கூட அவர்கள் அனுமதிக்கவில்லை,” என்றார்.

மேலும் படிக்க