• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்- தலைவர்கள் கருத்து

April 6, 2018 தண்டோரா குழு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை கவர்னர் பன்வாரிலால் நியமனம் செய்தார்.இந்நிலையில் எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமார்:ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டு துணைவேந்தரை நியமித்துள்ளார்; இதில் அரசுக்கு எந்த சம்பந்தமுமில்லை.

வைகோ:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு கண்டனம்.

தமிழிசை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திறமைகளின் அடிப்படையில் மட்டுமே நியமனம்…காவி கிடையாது…கல்வி மட்டுமே!

திருநாவுக்கரசர்:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ஏற்க முடியாது,தமிழகத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?…

ஜி.ராமகிருஷ்ணன்:அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பரிசீலிக்க வேண்டும்; ஆளுநர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்.

கமல்ஹாசன்:கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கேட்டோம்; துணைவேந்தரை கொடுத்திருக்கிறார்கள்…

வேல்முருகன்:கர்நாடகாவில் பாஜக ஓட்டுகேட்கவே அண்ணா பல்கலை. துணைவேந்தராக சூரப்பா நியமனம்.

டிடிவி தினகரன்:கர்நாடகாவை சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிப்பது தமிழக உரிமையை பாதிப்பதுபோல் உள்ளது.

மேலும் படிக்க