• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அணு ஆயுத ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க ஐநா சபை கூடுகிறது

September 4, 2017 தண்டோரா குழு

வட கொரியாவின் தொடர் அணு ஆயுத ஏவுகணை சோதனை குறித்து சர்வதேச நாடுகள் தந்துள்ள புகாரையடுத்து ஐநா சபை அவசரமாக இன்று(செப்டெம்பர் 4) கூடுகிறது.

வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்து வருகிறது. அதற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், வட கொரியா தொடர்ந்து சோதனையை நடத்தி வந்ததையடுத்து, ஐநா சபைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வட கொரியா நடத்தி வந்த சோதனைக்கு ஐநா கண்டனம் தெரிவித்தது. இருப்பினும், அந்த நாடு தொடர்ந்து ஏவுகணை சோதனையை கைவிடவில்லை.

இந்நிலையில், நீண்ட தூர ஏவுகணைக்காக வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் குண்டு ஏவுகணையை வட கொரியா ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்து அந்த சோதனையின் முடிவில் வெற்றியும் கிடைத்தது.

மேலும் வட கொரியா நடத்தும் அணு ஆயுத சோதனை மிகவும் ஆபத்தானது. அதனால், இந்த சோதனையை வட கொரியா நிறுத்தவேண்டும் என்று ஐநாவின் செயலாளர் ஜெனெரல் அந்தோனியோ கெடரெஸ் வலியுறித்தினார்.

மேலும் படிக்க