• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

July 10, 2018 தண்டோரா குழு

அஞ்சல் துறையில் புதியதாக பயன்படுத்தி வரும் மென்பொருள் மற்றும் இணைய சேவை குறைபாடுகளை களைய வலியுறுத்தி,அஞ்சல் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அஞ்சல் நிலைய வேலைகளுக்காக சி எஸ் ஐ எனப்படும் புதிய மென்பொருள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த மென்பொருளின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் பல முரண்பாடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில்,காலதாமதமாகுவதாகவும்,இதனால் உடனடியாக இதனை சரிசெய்ய வேண்டும் அல்லது பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும்,தனியார் மையத்திடம் இந்த மென்பொருள் பயன்பாடு அளிப்பதால்,இந்த துறையை தனியார் மயமாக்கும் செயலில் அரசு ஈடுபடுவதாகவும் எனவே உடனடியாக இதனை தடுக்க வேண்டும், இல்லையேல் அஞ்சல் நிலைய ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க