• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொரானா நிதியுதவி

June 4, 2021 தண்டோரா குழு

ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொரானா நிதியுதவி அமைச்சர் சக்ரபாணியிடம் வழங்கப்பட்டது.கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 200 கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகளை அளித்துள்ளனர்

கோவை புலியகுலத்தில் உள்ள சைப்ரஸ் ஓக்ஸ் ஃபிளாட்டில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள், சைப்ரஸ் ஓக்ஸ் ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கம் மூலம் இணைந்து கொரானா நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனர். மேலும் கொரானா நேயாளிகளுக்கு பெருமளவில் தேவையிருப்பதை அரிமா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மூலமும் கிரெடாய் மூலமும் அறிந்து கொண்டு அவர்கள் தங்களால் இயன்றவற்றை அளிக்க முன்வந்துள்ளனர்.

அவர்களது முயற்சியால் ரூ.17,10,000 இதற்காக சேகரித்துள்ளனர். இதைக் கொண்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தேவைப்படும் 200 கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகளை அளித்துள்ளனர். சமீபத்தில், சைப்ரஸ் ஓக்ஸ் ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜன் நாயர், பொருளாளர் முத்துக்குமார், கோயம்புத்தூர் கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, துணைச் செயலர் எஸ்.ஆர். அரவிந்த் ஆகியோர் தமிழ்நாடு உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஆர். சக்கரபாணியை சந்தித்து நன்கொடைக்கான கடிதத்தையும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.

மேலும் படிக்க