• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொரானா நிதியுதவி

June 4, 2021 தண்டோரா குழு

ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொரானா நிதியுதவி அமைச்சர் சக்ரபாணியிடம் வழங்கப்பட்டது.கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 200 கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகளை அளித்துள்ளனர்

கோவை புலியகுலத்தில் உள்ள சைப்ரஸ் ஓக்ஸ் ஃபிளாட்டில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்கள், சைப்ரஸ் ஓக்ஸ் ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கம் மூலம் இணைந்து கொரானா நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனர். மேலும் கொரானா நேயாளிகளுக்கு பெருமளவில் தேவையிருப்பதை அரிமா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மூலமும் கிரெடாய் மூலமும் அறிந்து கொண்டு அவர்கள் தங்களால் இயன்றவற்றை அளிக்க முன்வந்துள்ளனர்.

அவர்களது முயற்சியால் ரூ.17,10,000 இதற்காக சேகரித்துள்ளனர். இதைக் கொண்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு தேவைப்படும் 200 கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகளை அளித்துள்ளனர். சமீபத்தில், சைப்ரஸ் ஓக்ஸ் ஃபிளாட் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜன் நாயர், பொருளாளர் முத்துக்குமார், கோயம்புத்தூர் கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, துணைச் செயலர் எஸ்.ஆர். அரவிந்த் ஆகியோர் தமிழ்நாடு உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஆர். சக்கரபாணியை சந்தித்து நன்கொடைக்கான கடிதத்தையும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.

மேலும் படிக்க