• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் புதிய தலைவராக ஜெயந்தி மனோகர் தேர்வு

April 27, 2018 தண்டோரா குழு

கோவை ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் 2018-2019 ஆம் ஆண்டின் புதிய தலைவராக ஜெயந்தி மனோகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் புதிய தலைவர் பதவியேற்பு விழா நேற்று (26.04.18) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரம்மா குமாரிகள் சகோதரி கோதை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் புதிய தலைவர் ஜெயந்தி மனோகர் கூறுகையில்,

“ஃப்ளோ கோயம்புத்தூர் அமைப்பு பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக சமூகத்தில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இது தொழில்முனைவோர் ஒரு புதிய வியாபாரத்தை உருவாக்குவதற்கான மார்க்கெட்டிங் நுட்பங்களில் ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்க ஸ்வயம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மற்றும் வழிகாட்டு பாகத்தை உருவாக்கியுள்ளது.

மேலும்,பிரதம மந்திரியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கிறோம்.இத்திட்டத்தின் மூலம் ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளோம்.பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெற அவர்கள் தங்கள் பொருட்களை விற்க இலவச விற்பனையகங்களை வழங்குகிறோம்.

ஃப்ளோ அமைப்பின் குறிக்கோள் பொருளாதரா வளர்ச்சி பாதையில் பெண்கள் தங்கள் திறமைகளை,திறன்களை,அனுபவங்கள் மற்றும் ஆற்றல்களை பொருளாதராத்தின் அனைத்து துறைகள் மற்றும் நிலைகளிலும் வெளிப்படுத்த ஊக்குவிக்கவும்,உதவி செய்வதும் ஆகும்”.என்று கூறினார்.

மேலும் படிக்க