July 5, 2025
தண்டோரா குழு
கோவை க.க.சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் P.சாத்துகுட்டி தலைமையுரை வழங்கினார்.
செயலர் P.ஸ்ரீஹரி,துணைத் தலைவர் சைலஜா வேணு,தலைமை செயல் அதிகாரி T.K அஸ்வின், ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் D. கல்பனா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் R.பிரேம்குமார், கலந்து கொண்டார்.
இவர் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களின் குறிக்கோள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றை எடுத்துக் கூறினார்.
மாணவர்களின் ஒழுக்கமும் நாகரீகமும் மட்டுமே சமுதாயத்தை உயர்த்தும் என்றும் விளக்கி கூறினார்.உணவு உடை நாகரிகம் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றில் மாணவர்கள் மிகச் சிறந்து விளங்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.
இவரது உரையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தரவரிசையில் இடம் பெற்ற 62 மாணவர்களுக்கும்,இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டு 700 மாணவர்கள் தங்களது பட்டங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.