• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி

July 10, 2024 தண்டோரா குழு

கோவை க.க சாவடியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு,கல்லூரி முதல்வர் கல்பனா அனைவரையும் வரவேற்றார்.கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும்,நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து,மாணவர்களிடையே அவர் பேசுகையில்,நம்பிக்கை, மரியாதை, புரிதல் மற்றும் கல்வி மூலம் மாணவர்களின் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தி பேசினார்.மேலும் கல்வி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் மாணவர்கள் தங்கள் அணுகுமுறையை பலப்படுத்தி நல்ல நடத்தைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பங்கஜ் குமார் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்தார்.தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர் பேரவை உறுப்பினர்களை சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, முதலாம் ஆண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஆங்கிலத் துறை தலைவர் மஞ்சு நன்றி கூறினார்.இதில் கல்லூரியின் பேராசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க