• Download mobile app
30 Jul 2025, WednesdayEdition - 3458
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் – பிரேமலதா

March 30, 2017 தண்டோரா குழு

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருகிறார், ஏப்ரல் 6-ம் தேதி முதல் வேட்பாளரை ஆதரித்து ஆர்.கே. நகரில் பிரச்சாரம் செய்வார் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என பலரும் வாக்காளர்கள் பணம் கொடுக்கிறார்கள் அதனை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருகிறது என புகார் கூறினார்.

“நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள்தான். ஆனால் அப்படிப்பட்ட விவசாயிகள் மிக கஷ்டப்பட்டு தில்லியில் இத்தனை நாட்களாக போராடி வருகின்றனர். நதிகள் இணைப்பே விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். அதேபோல் மீனவர்களின் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும்” என்றார் பிரேமலதா.

தேர்தலில் மற்ற கட்சிகள் எல்லாமே பணத்தை நம்பியுள்ளன. ஆனால் தே.மு.தி.க. மக்களை நம்பியிருக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நல்லவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாகவும் , தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என அவர் கூறினார்.

மேலும் படிக்க