• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்ல தடை மாநகராட்சி கமிஷனர் அதிரடி உத்தரவு

January 15, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பொதுமக்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செல்ல வசதி உள்ளது. இங்கு அதிகாலை முதல் இரவு வரை பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த காலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது யாரும் நடைபயிற்சி செய்யவில்லை. அதன் பின் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அங்கு தினமும் பலர் நடைபயிற்சி மேற்கொள்வதுடன், உடற்பயிற்சியும் செய்து வருகிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவது இல்லை. அத்துடன் சமூக இடைவெளியும் கடைபிடிப்பது இல்லை.

இந்நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் ரேஸ் கோர்ஸ் உள்ளிட்ட அனைத்து இடங்களில் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு இன்று முதல் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க