• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.146 கோடியில் நகர்நல மையங்கள் கட்டுமான பணி மேயர், கமிஷனர் நேரில் ஆய்வு

July 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் வடக்கு மண்டலத்தில் ரூ.146 கோடி மதிப்பீட்டில் கட்டபட்டுவரும் நகர்நல மைய கட்டப்பணிகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கிழக்கு மண்டலம் பீளமேட்டில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தேசிய நகர்ப்புற நல்வாழ்வு மையம் மற்றும் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆய்வகம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மருந்து, மாத்திரை கையிருப்பு பற்றி அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர், அதே பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தை ஆய்வு செய்தனர்.

கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க உத்தரவிட்டனர்.இதன்பிறகு, பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் மையத்தை ஆய்வு செய்தனர். குப்பை தரம் பிரிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்து பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினர்.இதனைத்தொடர்ந்து, சத்தி சாலையில் உள்ள மாடு அறுவைமனை, நல்லாம்பாளையம் சக்தி நகர் பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலம் ஆகியவற்றை பார்வையிட்டனர். மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வின்போது, துணை மேயர் வெற்றிச்செல்வன், உதவி கமிஷனர்கள் சங்கர், மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க