• Download mobile app
10 Dec 2023, SundayEdition - 2860
FLASH NEWS
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி

May 25, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரியாக பணிபுரியும் சத்ய பார்வதி (27), சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் 518-வது இடம் பிடித்துள்ளார். இவர் தனது 4-வது முயற்சியில் இந்த வெற்றியை பெற்றார்.

இதுகுறித்து சத்ய பார்வதி கூறியதாவது: எனது சொந்த ஊர் தூத்துக்குடியாகும். கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக பணிபுரிகிறேன். தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. எனது 4-வது முயற்சியில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை தேர்வில் வெற்றி பெற்று நேர்காணல் முடிந்த பின்னர் மதிப்பெண்ணில் எனது வெற்றி பறிபோனது. இதையடுத்து தீவிரமாக படித்து வந்தேன். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத நினைப்பவர்கள் அரசு அளிக்கும் இலவச பயிற்சியை பயன்படுத்தி கொள்ளலாம்.

சமச்சீர் புத்தகங்கள், கடந்த கால கேள்விகளை படித்து வந்தாலே இந்த தேர்வில் வெற்றி பெற முடியும். முதல் முறையே வெற்றி பெறாவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி கிடைக்கும்,’’ என்றார்.

மேலும் படிக்க