• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

மனை வரைபடங்கள் அங்கீகரிக்க புதிய மென்பொருள் அறிமுகம் கோவை ஆட்சியர் தகவல்

February 7, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் புறநகர வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றங்கள் காரணமாக விளைநிலங்கள் அதிக அளவில் விவசாயம் அல்லாத இதர பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், அதிக அளவில் மனை வரைபடங்கள் நகரமைப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த உட்பிரிவுகள் வருவாய் கணக்குகளில் உடனுக்குடன் கொண்டு வரப்படாமல் மனுதாரர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று மனு செய்த பின்னர் நில அளவையாளர், கிராமத்திற்கு சென்று ஒவ்வொரு உட்பிரிவுகளையும் அளந்து, தயார்செய்து வட்டாட்சியர் உத்தரவு பெற்று, அதன்பின்னரே வருவாய் கணக்குகளில் மாறுதல் மேற்கொள்ளும் நடைமுறை தற்போது இருந்து வருகிறது.

இந்த சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, ஒரு புதிய மென்பொருள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மனை அபிவிருத்தியாளர்கள் பொதுசேவை மையத்தின் மூலம் உரிய கட்டணத்துடன் மனுவை சமர்ப்பித்து, அங்கீகரிக்கப்பட்ட மனை வரைபடத்தின்படி புதிய உட்பிரிவுகளை தமிழ்நிலம் மற்றும் கொலாப்லேண்ட் மென்பொருளில் உடனுக்குடன் ஒப்புதல் மேற்கொண்டு வருவாய் கணக்குகளிலும் மாறுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க