• Download mobile app
09 Jun 2023, FridayEdition - 2676
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கோடிக்கணக்கில் முறைகேடு – அதிகாரிகளிடம் புகார் மனு

May 24, 2023 தண்டோரா குழு

கோவை பாலக்காடு ரோடு மதுக்கரை மார்க்கெட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க இந்த கோவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது.

இந்த நிலையில் இந்த கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்தன.இது தொடர்பான புகார்கள் தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் பக்தர்கள் தரப்பில் இருந்து ஏராளமான அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தரமலிங்கேஸ்வரர் திருக்கோவில் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரும்,
எட்டிமடை எல்லை மாகாளியம்மன் திருக்கோவில் நிர்வாக அலுவலருமான தொழிலதிபர் சி.கே.கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் எட்டிமடை எல்லை மாகாளியம் மன் திருக்கோவில் நிர்வாக அறங்காவலராக உள்ளேன்.அந்த கோவிலில் நான் சிறப்பாக செயல் படுவதை பார்த்து என்னை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகியாக நியமித்தனர்.எனது பணிக்காலத் தில் எனது சொந்த பணத்தில் தர்மலிங்கேஸ்வரர் திருக் கோவிலுக்கு தண்ணீர் தொட்டி,பக்தர்கள் ஓய்வு எடுக்க இரண்டு இளைப்பாரும் மண்டபங்கள் கட்டிக் கொடுத்து உள்ளேன்.

சித்ரா பெளர்ணமி நாளில் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆன்மீக பணிகளை செய்து வந்தேன்.கோவில் நிர்வாகத்தில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.அதன்படி தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் வருமானம் முழுவதையும் தணிக்கையாளர் (ஆடிட்டர்) ஒருவரை கொண்டு கணக் கிட்டு முறைப்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினேன்.ஆனால் இதை தற்போது கோவில் நிர்வாகிகளாக இருக்கு கிருஷ்ணசாமி,அரசு பஸ் ஓட்டுனர் திருமூர்த்தி, கோவில் பூசாரி பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆடிட்டர் எல்லாம் அவசியம் இல்லை, அரசுக்கும் கணக்கு கொடுக்க தேவை யில்லை என்று கூறினர்.மேலும் அவர்கள் தமிழக அரசு கோவில் களுக்காக வகுத்து வைத்து உள்ள சட்ட திட்டங்களையும் கடைபிடிப்பது இல்லை.இதை தவறு என்று சுட்டிக்காட்டி நேர்மையாக செயல் பட்ட என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன்,ஆட்களை வைத்து மிரட்டலும் விடுத்தனர்.அரசு பஸ் ஓட்டுனராக இருக்கும் கோவில் நிர்வாகி திருமூர்த்தி பக்தர்களிடம் அடாவடியாக செயல்பட்டு வருகிறார்.

இவர்கள் தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் காணிக்கை களை அண்டாவில் அள்ளி சென்று தங்களது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகிறார் கள். அன்னதானத்திற்கு பக்தர்கள் தரும் மளிகை பொருட்கள்,காய்கறிகளையும் தங்கள் சொந்த உபயோகத்துக்கு எடுத்து செல்கின் றனர்.மேலும் பக்தர்களிடம் வசூல் செய்யும் நன்கொடை தொகைகளுக்கு எந்த வித ரசீதும் தருவது இல்லை.

மேலும் கோவில் கட்டுமான பணிகளுக்கு பக்தர் கள் நன்கொடையாக வழங்கும் சிமெண்ட் மூட்டைகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்கிறார்கள்.கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கில் நடந்து வரும் இந்த முறைகேடுகளை தமிழக அரசு கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி கோவில் பணத்தில் முறை கேடாக சேர்த்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரான சிவராஜ் உடன் இருந்தார்.

மேலும் படிக்க