- உச்சநீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல்
- உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் : டிச.5ஆம் தேதி விசாரணை
- “விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு” – நாசா
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள ஜல்லி மேட்டு புதூர் பகுதியில் வசிப்பவர் ராமசாமி. இவரது தோட்டத்தில் தேவையாம் பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். இவர்களிடம் 120க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரது ஒரு ஆடு ஆறு கால்களுடன் கூடிய ஆண் குட்டி ஆட்டை ஈன்றுள்ளது. பிறந்த இந்த ஆட்டுக்குட்டிக்கு வயிற்றின் அருகே புதிதாக இரண்டு கால்கள் முளைத்துள்ளன. இந்த ஆடு ஆறு கால்களுடன் நடந்தது. மேலும் நேரில் வந்து ஆய்வு செய்த கால்நடை மருத்துவர் ஆட்டின் உயிருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறினார்.
இதுகுறித்து விஜயன் கூறும்போது,
பல வருடங்ளாக ஆடுகள் வளர்த்து வருகிறேன். ஆனால் 6 கால்களுடன் ஆட்டுகுட்டையை தற்போது தான் பார்க்கிறேன். மேலும் இந்த ஆடு நல்லமுறையில் உள்ளது. இது பெரும் அதிசயமாக கருதப்படுகிறது என்று கூறினார். இந்த தகவல் அந்த பகுதியை பரவியது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்கு கூட்டமாக வந்தனர்.
வெங்காயம் திருடியவருக்கு தர்ம அடி !
“திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது” – சென்னை உயர் நீதிமன்றம்
கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி
ரயில் மோதி இந்தாண்டில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர் – ரயில்வே எஸ்.பி. மகேஸ்வரன்
இழப்பீடு வழங்காததால் 5 அரசு பேருந்துகள் ஜப்தி செய்ய கோவை நீதிமன்றம் உத்தரவு
கோவையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுக்க முயன்ற கணவர் கைது