• Download mobile app
09 Jun 2023, FridayEdition - 2676
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வீடுகளிலேயே செலுத்த மாநகராட்சி சார்பாக தொடர்பு எண் அறிவிப்பு

January 19, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பாக இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வீடுகளிலேயே சென்று செலுத்த தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த கோவை மாநகராட்சி சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 0422-2302323 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால் அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

மேலும், 60 வயதை கடந்த முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களை கடந்த நபர்களும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் அவர்களுக்கும்வீடுகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க