• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

பீரில் தூசிகள் மிதந்ததால் குடிமகன் அதிர்ச்சி

January 28, 2023 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9வது வீதியில் டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தூசி இருந்ததால் குடிமகன் அதிர்ச்சியடைந்தார்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9வது வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை மாநகரின் மையப்பகுதியில் உள்ளதால் இங்கு மது விற்பனை மிகவும் ஜோராக நடக்கும். மாநகர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிவோர், கட்டிட தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இங்கு மது வாங்கிவிட்டு அருகில் உள்ள பாரில் மது அருந்துவார்கள்.

இந்நிலையில் இன்று மதியம் கோவை பெரியகடை வீதி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(38) என்பவர் இக்கடையில் பிரிட்டிஷ் எம்பையர் பீர் வாங்கி உள்ளார். நண்பர்களுடன் அருகில் உள்ள பாருக்கு சென்று அந்த பீர் பாட்டிலை பார்த்த போது அதில் மிகவும் சிறிய அளவிலான தூசிகள் மிதந்து உள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார் ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க