• Download mobile app
09 Jun 2023, FridayEdition - 2676
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறு துளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

March 30, 2023 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறு துளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.

கல்லூரி துணை முதல்வர் அங்குராஜ் வரவேற்பு உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை உரை ஆற்றினார். செயலாளார் கண்ணையன் வாழ்த்துரை வழங்கினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.தொடர்ந்து பி.எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிறுதுளி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.

சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன்,பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் ஆகியோர்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு மாற்றிக் கொண்டனர்.

முன்னதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் கீழ், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டதற்கு சிறப்பு செய்யப்பட்டது. சிறுதுளி அமைப்பின் செயல்பாடுகள் குறித்து காணொளி படம் திரையிடப்பட்டது.இறுதியில் துணை முதல்வர் ஜெயந்தி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க