• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் யுஜி 2024 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் மாணவர்கள்

June 5, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் (ஏஇஎஸ்எல்) 3 மாணவர்கள் நீட் யுஜி 2024 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் மாணவர்கள் (ஏஇஎஸ்எல்) நீட் யுஜி 2024 தேர்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த 3 மாணவர்கள் 710 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

எஸ்.விஜய் கிருத்திக் 715 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 112 இடம்,நிஷா சைபுல்லா 710 மதிப்பெண்களுடன் தரவரிசைப் பட்டியலில் 372 இடம் மற்றும் ஜார்ஜ் 710 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் 455 இடம் பெற்றுள்ளார்.உலகளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் நீட் தேர்வுக்குத் தயாராவதற்காக ஏஇஎஸ்எல் வகுப்பறைத் திட்டத்தில் மாணவர்கள் சேர்ந்தனர்.

இதுகுறித்து பேசிய மாணவர்கள்,

“உள்ளடக்கம் மற்றும் பயிற்சி என இரண்டிலும் எங்களுக்கு உதவிய ஆகாஷிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஏஇஎஸ்எல்-ன் உதவி இல்லாமல் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை நாங்கள் புரிந்துகொண்டிருக்க மாட்டோம்” என்றனர்.

மாணவர்களின் சாதனையைப் பாராட்டி பேசிய ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் குமார் மிஸ்ரா கூறுகையில்,

“மாணவர்களின் முன்மாதிரியான சாதனையை நாங்கள் வாழ்த்துகிறோம். நீட் 2024 தேர்வு எழுத 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் சாதனையானது அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆதரவை பறைசாற்றுகிறது. எங்கள் மாணவர்களின் வருங்கால முயற்சிகள் வெற்றிபெற எங்களின் வாழ்த்துக்கள்” என்றார்.

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இளங்கலை மருத்துவம் (MBBS) பல் மருத்துவம் (BDS) மற்றும் AYUSH (BAMS, BUMS, BHMS) முதலியன படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் முதன்மை மருத்துவ கல்வியை படிக்க விரும்புவதற்கான தகுதித் தேர்வாக தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க