October 3, 2023
தண்டோரா குழு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் கடனுதவி வழங்கும் விழாவில் சதீஷ் என்பவர் லோன்தரவில்லை என ஆவேசப்பட்டதால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளும் கடனுதவி வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒருவர் திடிரென எனக்கு லோன் கிடைக்கவில்லை மனவேதனை பட்டு வெளியேறினார் அதனால் சல சலப்பு ஏற்பட்டது .இதனால் சற்று நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து,நிர்மலா சீத்தாராமன் அவருக்கு என்ன பிரச்சனை என்று கேட்டறிந்தார். நீங்கள் உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக செய்துத் தரப்படும் என்று கூறினார்.