• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி பொள்ளாச்சி விற்பனை பிரதிநிதி கைது

December 17, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் விவேகானந்தன் (31). இவர், பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள நிதி நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.இவர் இந்த நிறுவனத்தில் இருசக்கர வாகனங்கள்,4 சக்கர வாகனங்களுக்கு விற்பனை செய்யும் ஏஜென்ட் மூலம் மற்றும் தனி நபர்களுக்கு கடன் உதவி செய்து மாதந்தோறும் வசூலித்து வந்தார்.

இந்நிலையில்,கடந்த ஜூலை மாதம் 27ம் தேதியில் இருந்து விவேகானந்தன் திடீரென வேலைக்கு வராமல் தலைமறைவானார். அப்போது அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச்ஆப் என்று வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிதி நிறுவனத்தினர் நிதி நிறுவன கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை அவர் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன இயக்குனர் ராம்குமார் உடனே இதுதொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். இதில், கடந்த 15-7-2022 மற்றும் 27-7-2022 ஆகிய தேதிகளில் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 12 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து,விவேகானந்தன் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.தொடர்ந்து நேற்று அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

மேலும் படிக்க