• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் பென்சன் ஆர்டர்கள் வழங்கும் நிகழ்வு

January 28, 2023 தண்டோரா குழு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் பென்சன் ஆர்டர்கள் வழங்கும் நிகழ்வு நடக்கிறது

கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உதவி கமிஷனர் (பென்சன்) ஆல்பர்ட் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை குறிக்கும் அகாம் நிகழ்வை வரும் ஆகஸ்ட் 15, 2023 வரை கொண்டாடுகிறது. இது சம்பந்தமாக, பிரயாஸ் தொடர்பான ஒரு நடவடிக்கையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் கோவை மண்டல அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 31ம் தேதி காலை 10.30 மணிக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அலுவகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிராயஸ் என்பது பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறும் நாளில் ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ் ஓய்வூதியத்திற்குத் தகுதியான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் உறுப்பினர், ஓய்வூதியக் கோரிக்கையை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம். 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஓய்வுபெறும் தகுதியான உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான பென்சன் ரிலிஸ் ஆர்டர்கள் மேற்படி நிகழ்வின் போது வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க