• Download mobile app
12 Mar 2026, ThursdayEdition - 3683
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீவிரவாதிகள் தாக்குதலில் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர்

January 17, 2017 தண்டோரா குழு

எகிப்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.

” தென் மேற்கு எகிப்தின் புதிய பள்ளத்தாக்கு கோவேர்நோரடேவில் என்னும் பகுதியில் இருந்து 7௦ கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சார்கா நகர். அங்கு அல் நாக்ப் சோதனை சாவடி உள்ளது.

திங்களன்று காவல்துறையினர் அந்த சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்துக்கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 8 காவல்துறையினர் உயிரிழந்தனர் 3 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். துப்பாக்கி சண்டையில் தப்பி சென்ற தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுபேற்கவில்லை.” என எகிப்தின் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

2௦11ம் ஆண்டு எகிப்தில் நடந்த புரட்சிக்கு பிறகு குடியரசு தலைவர் ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து எகிப்து நாட்டில் பல தாக்குதல்கள் நடந்தது வருகிறது.

எகிப்தில் முன்னாள் அதிபர் மோர்சி, கடந்த 2௦13ல் பதவியிறக்கம் செய்யப்பட்டதையடுத்து காவல்துறை மற்றும் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க