• Download mobile app
11 Jul 2025, FridayEdition - 3439
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திறமையான எழுத்தாளர்களுக்கு சமூக வலைதளங்கள் நல்ல களம் அமைத்து கொடுக்கப்படுகிறது – விஜயகார்த்திகேயன்

July 11, 2019 தண்டோரா குழு

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகத்தில் எளிமையான எழுத்து நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனருமான விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையரும், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனருமான கார்த்திகேயன் எழுதிய “ஹார்ட் குவேக்” என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. கோவையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஐ. ஏ.எஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மருத்துவ த்ரில்லர் கதை பின்னணியை கொண்டு உருவாகியுள்ள இப்புத்தகத்தை கார்த்திகேயன் வெளியிட காயத்ரி கிருஷ்ணன் மற்றும் தனியார் வணிக வளாகத்தின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் ஆகியோர் பெற்றுகொண்டனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேயன்,

எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகத்தில் எளிமையான எழுத்து நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், திறமையான எழுத்தாளர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் நல்ல களம் அமைத்து கொடுக்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும் படிக்க