• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க உயரதிகாரிகள் பரிந்துரை

June 10, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஜூன் 14ம் தேதியுடன் தற்போது உள்ள ஊரடங்கு முடிய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதனால் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டங்களில் தளர்வு இல்லை. பிற மாவட்டங்களில் அதிகாலை நடைப்பயிற்சி, டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க