சேரன் செவிலியர் கல்லூரியுடன், சத்யன் கண் மருத்துவமனை மற்றும் கோயமுத்தூர் க்ளாக்கோமா அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை இன்று நடத்தின.சேரன் செவிலியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமில்,கல்லூரி முதல்வர் டாக்டர்.மீனாகுமாரி, சேரன் பார்மசி கல்லூரியின் டீன் டாக்டர். சிவகுருநாதன், சத்யன் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். அருணா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
மேலும், தெலுங்குப்பாளையம், ஆண்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஏதுவாக கல்லூரி சார்பில் இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன.குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த முகாமில், கண்புரை, மாறுகண், டயாபடிக் ரெட்டினோபதி, கண்நீர் அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ”ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை உலக க்ளாக்கோமா வாரமாக அனுசரிக்கப்படுகிறது. க்ளாக்கோமா என்னும் கண்நீர் அழுத்த நோய் எவ்வித அறிகுறியின்றி கண் இழப்பை ஏற்படுத்தும். ஆகையால், க்ளாக்கோமா வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துகின்றோம்” எனக் கல்லூரி முதல்வர் கூறினார்.
முகாமில் கலந்து கொண்ட சுப்பிரமணியம் பேசுகையில், ”சென்ற ஆண்டு கண் சிகிச்சை செய்து கொண்டதால், இந்த இலவச முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டேன், என்னுடன் எனது மனைவியும் கண் பரிசோதனை செய்து கொண்டார்” என்றார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்