• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரலின் மரம் நடும் விழா!-முக்கிய அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

June 5, 2024 தண்டோரா குழு

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு 1.21 கோடி மரங்கள் நடத் திட்டமிடப்பட்டு உள்ளது.சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மரம் நடும் பணிகளின் துவக்க விழாக்கள் நடைப்பெற்றது.இதில் தமிழக அரசின் முக்கிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர மேயர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் மரக்கன்றுகள் நடும் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

கோவை பொள்ளாச்சியில் மே 23 ஆம் தேதி தொடங்கிய நிகழ்வில் நாடளுமன்ற உறுப்பினர் கே.சண்முகசுந்தரம் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு அவர்களும், திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன் அவர்களும், ஈரோட்டில் அமைச்சர் எஸ். முத்துசாமி அவர்களும் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்த மரம் நடும் பணிகளை துவங்கி வைத்தனர்.

மேலும் கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ்,தூக்குக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன், மதுரையில் அமைச்சர் மூர்த்தியும் இவ்விழாக்களில் கலந்து கொண்டனர். மேலும் தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், விருதுநகர், கடலூர், கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரம் நடும் விழாக்கள் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேயர், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மரம் நடும் விழாக்கள் புதுசேரியிலும், தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில், மொத்தம் 92 இடங்களிலும் நடைப்பெற்றது. இதன் மூலம் 610 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை மொத்தம் 9,55,000 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈஷா 2002-ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை பரிந்துரை செய்கிறது. மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

மேலும் படிக்க