• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

சிறுமியை திருமணம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை

March 18, 2023 தண்டோரா குழு

கோவை அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்த 23 வயதான வாலிபர் கூலி தொழில் செய்து வந்தார். இவர்கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்ததுடன், அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தினார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

பின்னர் அந்த சிறுமிக்கு பிரசவ வலி வந்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போதுதான் அந்த சிறுமிக்கு 16 வயதில் திருமணம் நடந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் கோவை கிழக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த வாலிபர் சிறுமியை திருமணம் செய்துடன் அவரை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக கோவையில் உள்ள போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரஷீதா ஆஜராகி வாதாடினார்.

மேலும் படிக்க