• Download mobile app
14 Jul 2025, MondayEdition - 3442
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட 3.26 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்

November 20, 2020 தண்டோரா குழு

சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைக்க பெற்ற தகவலின் பேரில் தீபாவளி அன்று புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் ஏர் அரேபியா விமானம் G-9 413 விமானம் மூலம் வந்த பயனிகளை கண்காணித்தனர்.

கேரளா மாநிலம் காசர்கோடு, சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த பதினோறு பேரிடம் தங்கம் கொண்டு வரப்படுகிறதா? என விசாரணை மேற்கொண்டபோது இல்லை என மறுத்து உள்ளனர். அவர்களது செயல்கள் முன்னுக்கு பின் முரணான பேச்சால் சந்தேகம் அடைந்த புலனாய்ய் அதிகாரிகள் அவர்களை தீவிர சோதனை மேற்கொண்டபோது உள்ளாடைகளில் பசை வடிவத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கமும் ஆசனவாயில் மறைத்து எடுத்து வரப்பட்ட 1 கிலோ தங்கமும் என 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யபட்டது. பறிமுதல் செய்யபட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 3.26 கோடி ரூபாய் என வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இவர்கள் கொண்டு வந்த சிகரெட், ஐ போன், மற்றும் டிரோன் ஆகியன பறிமுதல் செய்யபட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பதினோறு பேர் கைது செய்யபட்டு பின்னர் விடுவிக்கபட்டனர். தங்க கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் இந்த மாதம் இரண்டாவது முறையாக தங்க கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அதிக அளவிலான கடத்தல் பொருட்களை கைபற்றபட்டு உள்ளதாக வருவாய்புலனாய்வு பிரிவு அலுவலகம் மூலம் அறிக்கை கொடுக்கபட்டு உள்ளது.

மேலும் படிக்க