January 9, 2024
தண்டோரா குழு
கோவை விழாவின் ஒரு பகுதியாக விவேகாலயா பள்ளியின் சார்பாக மாணவர்கள் அனைவரும் நடைப்பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்கள் அனைவரும் சமம், மாணவரின் திறமைகள், மாணவர்களுக்கு தனிப்பயிற்சி, கல்வியின் முக்கியத்துவம் என புதுமையான வகையில் வகுப்புகள் நடத்தபடுகிறது என்று உண்மையை பறைசாற்றும் விதமாக பலவித பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆரம்பித்து 2.5km பயிற்சி மேற்கொண்டு முடிக்கப்பட்டது.போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் Young Indians ‘தளிர்’ அமைப்பின் குழுவினரும் இதில் பங்கேற்றனர்.மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.